தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நல்லகாளிபாளையம் பிஏபி வாய்க்காலில் அவசரகால தடுப்பு கதவை நிறுவ வேண்டும்

 

பல்லடம், ஆக. 2: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் நல்லகாளிபாளையத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் அவசரகால தடுப்பு கதவை மீண்டும் நிறுவ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் இருந்து நல்லகாளிபாளையம் வழியாக ஆண்டிபாளையம் செல்லும் பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் நல்லகாளிபாளையம் கிராமத்தில் ஓடை குளக்கரை பகுதியில் ஏற்கனவே ஒரு அவசர கால தடுப்பு கதவு (ஷட்டர்) இருந்தது. வாய்க்காலில் தண்ணீர் அதிகம் வரும்போது உடைப்பு ஏற்பட்டால் இந்த கதவை திறந்து உபரி தண்ணீரை ஓடைக்கு விட்டு பழுதை சரி செய்ய ஏதுவாக இது நிறுவப்பட்டு இருந்தது.

தற்போது திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டலத்திற்கு பாசன தண்ணீர் திறந்து விடப்பட்டு விரைவில் பொங்கலூர் பகுதிக்கு தண்ணீர் வந்தடையும் நிலையில் அவசர கால தடுப்பு கதவை அகற்றிவிட்டு கான்கிரீட் மூலம் சுவர் எழுப்பி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிகம் வந்தால் வேறு இடத்தில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. மீண்டும் அப்பகுதியில் அவசரகால தடுப்பு கதவை நிறுவ வேண்டும் என்று பொங்கலூர் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் சார்பில் நல்லகாளிபாளையம் விவசாயி திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார்.