தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராக்கி கயிறு விற்பனை விறுவிறுப்பு

 

திருப்பூர், ஆக. 3: சகோதரத்துவத்தை போற்றும் வகையில் வட மாநிலங்களில் ரக்சா பந்தன் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சா பந்தன் விழாவின்போது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலம் பெற்று வாழ சிறப்பு பிரார்த்தனை நடத்தி, அவர்கள் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டிக்கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ரக்சா பந்தன் விழா, வருகிற 9ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் வசிக்கின்றனர். திருப்பூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் இங்கேயே ரக்சா பந்தன் விழாவை கொண்டாடுவதற்காக ராக்கி கயிறுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு உள்ளது. மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் ராக்கி கயிறுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு உள்ளது. சுமார் ரூ.20 முதல் ரூ.450 வரையிலான ராக்கி கயிறுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விற்பனையாளர் கூறுகையில், ரக்சா பந்தன் விழா 9ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கு ஒரு வார காலம் முன்னதாகவே பொதுமக்கள் ராக்கி கயிறுகளை தேர்ந்தெடுத்து வாங்கிச்செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கயிறு மட்டுமே விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது பல்வேறு வடிவங்களில் அவை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கயிரோடு சேர்த்து முத்திரை, ராமர், கிருஷ்ணர் உள்ளிட்டோரின் சிறிய அளவிலான புகைப்படங்களுடன் கூடிய ராக்கி கயிறுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது திருப்பூரைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்தோடு வாங்கி செல்வது வழக்கம். தற்போது விற்பனைக்காக காட்சி படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Related News