தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இன்று ஆடி 18 பண்டிகை பூக்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

 

திருப்பூர், ஆக. 3: ஆடி 18ஆம் நாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இன்று ஆடி 18 பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஏராளமானோர் பூக்கள் வாங்குவதற்காக நேற்று திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூ மார்க்கெட் வந்திருந்தனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. ஆடி 18 பண்டிகைக்கு தேவையான பூக்களை வாங்குவதற்காக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

பூக்கள் விலையும் நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ.720 முதல் 900 வரையிலும், மஞ்சள் செவ்வந்தி கிலோ 400 ரூபாய், அரளி 150 ரூபாய், மரிக்கொழுந்து 40 ரூபாய், முல்லை பூ கிலோ 600 ரூபாய், பெங்களூர் ரோஸ் 320 ரூபாய், வெள்ளை சம்பங்கி 150 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாதத்தில் சுபமுகூர்த்த விசேஷங்கள் இல்லாத நிலையில் ஆடி மாதத்தில் ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை மற்றும் ஆடி 18 நாட்களில் பூக்கள் விலை சற்று சுமாராக இருக்கும் எனவும், காற்று காலம் என்பதால் வரத்து குறைந்து விலை சற்று அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

Related News