தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அணைப்பாளையம் தரை பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

 

திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் மங்களம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய வகையிலான தரைப்பாலம் உள்ளது. நொய்யல் ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்த தரைப்பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை செல்கின்றன. தரை பாலத்தின் 2 பக்கங்களிலும் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அவை சேதம் அடைந்து தற்போது பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய நிலையில் தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் நிலை தடுமாறி நொய்யல் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து அப்பகுதிகளில் தடுப்புச்சுவர் அல்லது தடுப்பு கற்கள் அமைக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

அதேபோல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தரைப்பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கடிக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. அதுபோன்ற சமயங்களில் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலையில் தரைப் பாலத்திற்கு அருகாமையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலக் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.