அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம்: சொக்கப்பனை கொளுத்தி தரிசனம்
அவிநாசி, டிச. 5: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நேற்று அவிநாசி அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு கோயில் முன்புறம் உள்ள ஸ்தீப கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு...
குன்னத்தூரில் ரூ.2 லட்சத்துக்கு தென்னங் கருப்பட்டி ஏலம்
அவிநாசி, டிச. 3: அவிநாசி அருகே குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற தென்னங்கருப்பட்டி ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 1,500 கிலோ தென்னங்கருப்பட்டியை உற்பத்தியாளர்கள் ஏல மையத்துக்கு கொண்டு...
மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு
திருப்பூர், டிச. 3: திருப்பூர் கோட்டம், திருப்பூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் மின் பகிர்மான கழக களப்பணியாளர்களுக்கான மின் பாதுகாப்பு வகுப்பு நேற்று நடைபெற்றது. அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில்,...
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நீடிக்கப்பட்ட காலத்திற்குள் வாக்காளர்கள் வழங்க வேண்டும்
திருப்பூர், டிச. 3: பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நீடிக்கப்பட்ட காலத்திற்குள் வாக்காளர்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் வருகிற 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர்...
மிதுனம்பள்ளம் அருகே பைக்குகள் மோதி வாலிபர் பலி
பாலக்காடு, டிச. 2: பாலக்காடு மாவட்டம், கொடும்பு அருகே மிதுனம்பள்ளம் அருகே இரண்டு பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்காடு மாவட்டம், சித்தூர் தெக்கேக்கிராமம் சாஸ்தா நகரை சேர்ந்த கண்ணதாசனின் மகன் ராகுல் (23). இவர், தனது பைக்கில் இவரது நண்பர்களான ஆதர்ஷ், அத்வைத் ஆகியோர் சித்தூரிலிருந்து பாலக்காடு நோக்கி...
வெற்றிலப்பாறை பாலம் பகுதியில் ஆற்றில் குளித்த சுற்றுலா பயணி நீரில் மூழ்கி பலி
பாலக்காடு, டிச. 2: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அதிரப்பிள்ளி அருகே வெற்றிலப்பாறை பாலம் ஆற்றில் குளித்த சுற்றுலா பயணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். எர்ணாகுளம் மாவட்டம், போர்ட் கொச்சியை சேர்ந்தவர் சுதீர் (55). இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சாலக்குடி அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வந்தார். இதையடுத்து காலடி...
தவற விட்ட நகைகளை ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்
பல்லடம், டிச.2: பல்லடத்தில் பயணி தவற விட்ட 10 பவுன் தங்க நகையுடன் கூடிய பையை அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் பத்திரமாக மீட்டு போலீசில் ஒப்படைத்தார். கோவையைச் சேர்ந்தவர் முகமது இர்பான் (17). இவர் தனது சகோதரி சுவீனா, (25), பாட்டி சைனமா, (65) ஆகியோருடன், திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல...
தன்னிறைவை நோக்கி செல்லும் பல்லடம் அரசு மருத்துவமனை
பல்லடம், டிச.1: கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 90 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 70க்கும் மேற்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனையும் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்ட தலைமை...
வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களிடம் இருந்து படிவம் பெறும் பணி
திருப்பூர்,டிச.1:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 24,44,929 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கடந்த 4ம் தேதி முதல் வழங்கப்பட்டது. தற்போது படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் இணையவழியாக பதிவேற்றம்...