திருவெறும்பூர் அருகே பைக்குகள் மோதியதில் வாலிபர் பரிதாப பலி
திருவெறும்பூர், ஜூலை 29: திருவெறும்பூர் அருகே கைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் எச்இபிஎப் தீயணைப்பு நிலைய ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு தேர்வான வாலிபர் பலியானர். மேலும் 2 பேர் பலத்த காயம்அடைந்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் அன்புமணி. இவரது மகன் அஜய் (19). இவர் ஐடிஐ முடித்துவிட்டு எச்இபிஎப் தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பதற்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் இவரும் அவரது நண்பர் முகேஷ் (19) ஆகியோர், நவல்பட்டு அண்ணா நகர் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த தன்ராஜ் மகன் மகேஸ்வரன் (24) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் அண்ணா நகரில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று விட்டு மொபட்டில் வந்தார்.
எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே அஜய் பரிதாபமாக உயிரிழந்தார். முகேஷ் மற்றும் மகேஷ்வரன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.