திருச்சி பகுதியில் 29ம் தேதி மின்நிறுத்தம்
திருச்சி, ஜூலை 26: திருச்சி நீதிமன்ற வளாகம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் 29ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் புதுரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்சாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணா நகர், குட்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கே.எம்,சி. புத்துார், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலுார் சாலை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.