தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முசிறி வட்டத்தில் காவிரி கரையோரங்களில் பேரிடர் மீட்பு குழு முகாம்

 

முசிறி, ஜூலை 28: முசிறி தாலுகாவில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு காவிரி கரை ஓரங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் தற்போது பெருமழை பெய்து வருகிறது அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக அங்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தத் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்துவரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் முசிறி வட்டத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை வாய்ப்பு குழுவினர் ஆய்வாளர் கலையரசன் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

இவர்கள் எந்த நேரமும் மக்களுக்கு பணி செய்யும் வகையில் குணசீலம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களை முசிறி தாசில்தார் லோகநாதன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் குணசீலம் தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.