தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மலைக்கோட்டையில் ஆடிப்பூர விழா; ரிஷப வாகனத்தில் அம்பாள் புறப்பாடு

திருச்சி, ஜூலை 24: திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடி பூரம் திருவிழாவின் 5ம் திருநாளான நேற்று காலை அம்மன் கேடயத்திலும், மாலையில் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினார். திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடிபூரம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் திருநாளான 23ம் தேதி காலை அம்மன் கேடயத்திலும், மாலை ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் சாதித்தார்.

6ம் திருநாளான 24ம் ேததி காலை கேடயத்திலும், மாலை உள்ளே உள்ள குளத்தில் தீர்த்தவாரியும், மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் புறப்பாடு மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு, 7ம் திருநாளான 25ம் தேதி அம்மன் காலை கேடயத்திலும், மாலை கிளி வாகனத்திலும், 8ம் திருநாளான 26ம் தேதி காலை கேடயத்திலும், மாலை குதிரை வாகனத்திலும், 9ம் திருநாளான 27ம் தேதி காலை கேடயத்திலும் மாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேர் நிகழ்ச்சியும், விழாவின் நிறைவாக 28ம் தேதி காலை தீர்த்வாரியும், மாலை அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா, மாணிக்க விநாயகர் தேய்பிறை சதுர்த்தி புறப்பாடு, இரவு அம்மன் சன்னிதியில் பூரம் தொழுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நிறைவு நாள் தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளிகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் உமா லட்சுமணன், பேஸ்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related News