தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 8ம்நாளில் திரு இருதய சபை அருட்சகோதரர்கள், பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி

தூத்துக்குடி, ஆக. 3:தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற, பஸிலிக்கா அந்தஸ்து பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443 ஆவது ஆண்டு திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இத்திருவிழா வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழா நாள்களில் உலக நன்மை, சமாதானம், மாணவ-மாணவிகளின் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும்.

இந்நிலையில், நேற்று 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், காலை 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடந்தது. காலை 6.30 மணிக்கு புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் துவக்கப்பள்ளி, மனையியல் கல்லூரி, புனித சார்லஸ் பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 7.30 மணிக்கு புனித யூதாதேயூ ஆலய பங்கு இறைமக்கள், கப்புச்சின் சபை துறவியர், திரு இருதய சபை அருள்சகோதரர்கள், புனித மரியன்னை மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. இதில் இறைமக்கள், துறவறத்தார், மாணவர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 8.30 மணிக்கு மரியின் ஊழியர் சபை அருள்சகோதரிகள், புனித மரியன்னை கல்லூரி, புனித அலாய்சியஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. காலை 9.30 செயின்ட் தாமஸ் பள்ளிகள், செயின்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட திருப்பலி நடந்தது. இதில் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் திருப்பலி நடந்தது. பகல் 11 மணிக்கு ரீத்தம்மாள்புரம் பங்கு மக்களுக்கானதிருப்பலி பங்கு தந்தை அர்த்தநாசிஸ் ஜோ தலைமையில் நடந்தது. மாலை 5.30 பெண்கள் பணிக் குழுக்களுக்கான திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணி நன்மைகள் செய்து வாழ என்ற தலைப்பில் கள்ளிகுளம் பனிமாதா மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை நிகழ்த்தினார்.

இன்று (3ம் தேதி) நற்கருணை பவனியும் வரும் 5ம் தேதியன்று அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான இறைமக்கள் தூத்துக்குடியில் கூடுவர் என்பதால் அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News