பிரதம மந்திரி தானிய வள வேளாண்மை திட்டம் தொடக்க விழா

தூத்துக்குடி,அக்.14: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் பிரதம மந்திரி தானிய வள வேளாண்மை திட்டம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் வரவேற்று பேசினார். இதில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தோட்டக்கலை துணை...

ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்

By Karthik Yash
6 hours ago

தூத்துக்குடி,அக்.14: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கொம்பையா. ராமலட்சுமி, மனோன்மணி, நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழில் சங்கங்களின் நிர்வாகிகள்...

இபிஎப்ஓ நெல்லை மண்டலம் சார்பில் கோவில்பட்டியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

By Karthik Yash
6 hours ago

கோவில்பட்டி, அக். 14: கோவில்பட்டியில் இபிஎப்ஓ நெல்லை மண்டலம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஆடிட்டர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நெல்லை அமலாக்க அதிகாரி கோமதி சுந்தரவேல் கலந்து கொண்டு பேசுகையில், வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் நாட்டில்...

சோரீஸ்புரம் பள்ளியில் விழிப்புணர்வு பிரசாரம்

By Francis
13 Oct 2025

  தூத்துக்குடி, அக். 13: தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதுகுறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் யோகமணி சங்கர், சக்திவேல், விஸ்வநாதன், அந்தோணி ராஜ், தவசி உள்ளிட்டோர் தீபாவளி பண்டிகை நாட்களில் மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசு...

குளத்தூரில் மாட்டு வண்டி போட்டி மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

By Francis
13 Oct 2025

  குளத்தூர்,அக்.13: குளத்தூர் பெருமாள் கோயில் புரட்டாசி உற்சவத்தையொட்டி மாட்டு வண்டி எல்கை போட்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். குளத்தூர் பெருமாள் கோவில் புரட்டாசி உற்சவத்தையொட்டி மாட்டுவண்டி எல்கை போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறியமாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயங்கள் நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மாட்டுவண்டி போட்டியை கொடியசைத்து...

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

By Francis
13 Oct 2025

  கோவில்பட்டி, அக். 13: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மெழுகுபட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் கெவின் குமார் (12). இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உருளைக்குடி தெற்கு தெருவில் உள்ள தனது தாத்தா அர்ஜுனன் (69) என்பவரது வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறையையொட்டி...

திருச்செந்தூரில் ஓவியபோட்டி

By Karthik Yash
11 Oct 2025

தூத்துக்குடி, அக். 12: உலக அமைதிக்காக திருச்செந்தூர் ஸ்டார் மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் அரிமா சங்கங்களின் சார்பில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அரிமா சங்க முன்னாள் ஆளுநர் முருகன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். அரிமா சங்க உலக அமைதிக்கான தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஒருங்கிணைப்பில் திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம், சாயர்புரம் செவத்தையாபுரம்...

மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

By Karthik Yash
11 Oct 2025

கோவில்பட்டி, அக். 12: கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி காமராஜர் அரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த ஒன்றியச் செயலாளர் முருகேசன், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ள 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று...

ரூ.3.15 லட்சம் நகையை பையுடன் தவறவிட்ட தொழிலாளி மனைவி

By Karthik Yash
11 Oct 2025

தூத்துக்குடி, அக். 12:தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் ரூ.3.15 லட்சம் மதிப்பிலான நகையை பெண் தவறவிட்ட நிலையில் அதை மீட்ட போலீசார் மீட்டு முறைப்படி உரியவரிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி கோயில்பிள்ளைவிளையைச் சேர்ந்தவர் அந்தோனி. தொழிலாளி. இவரது மனைவி ஜெயலதா (45) நேற்று முன் தினம் தனது மகள் படிப்பிற்காக தனது 3 அரை பவுன் தங்க நகையை...

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை

By Karthik Yash
10 Oct 2025

திருச்செந்தூர்,அக்.11: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு அக்.27ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 27ம் தேதி (திங்கள்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று தூத்துக்குடி மாவட்டம்...