தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாத்தான்குளம் அருகே ஏசி மெக்கானிக்கின் வீட்டை சூறையாடிய டிரைவர் கைது

சாத்தான்குளம், ஜூலை 31: சாத்தான்குளம் அருகே ஏசி மெக்கானிக்கின் கார் மற்றும் வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் ஜெகநாதன் (35). பெங்களூரில் கார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ராஜா எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு சங்கரன்குடியிருப்பு தெற்குத் தெருவைச் சேர்ந்த பொன்ராஜின் மகனான அகிலன் என்பவரது வீட்டில் மின் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்காக அகிலனின் வீட்டு முன்பாக உள்ள மின்கம்பத்தில் மீது ஏறி ராஜா வேலைபார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அகிலனுக்கும், ஜெகநாதனுக்கும் இடையே விரோதம் உருவானது.

இந்நிலையில் பெங்களூரில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெகநாதன் ஊர் திரும்பியபோது மின்சாரம் தாக்கி ராஜா உயிரிழந்தது தொடர்பாக அகிலன் தரப்பில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டதாக ஊர்த்தரப்பினர் கூறினர். இதுகுறித்து தெரியவந்த ஜெகநாதன், விவரம் கேட்பதற்காக கடந்த 27ம் தேதி அகிலனின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு அகிலன் இல்லாததால் ஆத்திரமடைந்த ஜெகநாதன், அகிலனின் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அகிலனின் கார் மற்றும் வீட்டு ஜன்னல்களை அடித்து சேதப்படுத்தி சூறையாடினார். மேலும் அகிலனின் பெற்றோருக்கும் கொலைமிரட்டல் விடுத்துச் சென்றாராம். இந்த தாக்குதல் சம்பவத்தில் அகிலனுக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே அகிலனின் வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை ஜெகநாதன் அடித்து உடைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துஅகிலன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், தாக்குதலில் ஈடுபட்ட ஜெகநாதனை கைது செய்தார்.