தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்

ஓட்டப்பிடாரம், ஆக.2: மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 7.45 மணிக்கு ஓட்டப்பிடாரம் தேரடி திடல் பகுதிக்கு வந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் எம்எல்ஏ மோகன் முன்னிலையில் பெண்கள் முளைப்பாரி மற்றும் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சாலையோரம் நின்ற மக்களையும், கட்சிக்காரர்களை பார்த்து வணங்கினார். தொடர்ந்து பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். அதிமுக பாஜவுடன் சேர்ந்ததால் அவதூறு பரப்பி அரசியல் லாபம் தேடுகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது.

நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்டத்திற்கான கூலியை டெல்லி சென்று மக்களுக்காக பிரதமரிடம் பேசி பெற்றுத் தந்ததும் அதிமுக தான். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சொத்துக்களை இழந்த வ.உ.சிதம்பரனார் பிறந்த மண்ணில் நான் நின்று பேசுவது பெருமையாக உள்ளது. சட்டமன்ற வளாகத்தில் அவருக்கு முழு உருவச் சிலையும், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனாருக்கு முழுஉருவ வெண்கல சிலையும் அமைத்துக் கொடுத்தோம். மேலும் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனைவரையும் போற்றும் அரசாகவும் இருந்ததை அனைவரும் அறிவர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாணவர்களுக்கான லேப்டாப், தாலிக்கு தங்கம் மற்றும் இதர திருமண உதவித் திட்டங்கள் என மக்கள் பயன் பெற்று வந்த பல நல்ல திட்டங்களால் பயனடைந்தவர்கள் ஏராளம். அதிமுக அரசு அமைந்ததும் மீண்டும் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். நிதி வருவாய் எதுவும் கிடைக்கப்பெறாத கொரோனா காலகட்டத்திலேயே மக்களின் நிலை அறிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவியது அதிமுக அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

Related News