தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் கோடைகால இயற்கை முகாம்

 

முத்துப்பேட்டை, ஜூலை 31: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனச்சரகம் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் திருவாரூர் வனக்கோட்டத்தின் சார்பாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கோடைகால இயற்கை முகாம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். முன்னதாக வனச்சரக அலுவலர் சதீஷ் கண்ணன் வரவேற்றார்.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ், ஏவிசி கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரி கிருஷ்ணன், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் நடனம் மறவக்காடு வனக்குழு தலைவர் சங்கர், வனவர் சீனிவாசன் மற்றும் வனத்துறை அனைத்து பணியாளர்களும் கலந்துக்கொண்டனர்.

இந்த முகாமில் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பதன் குறித்து விழிப்புணர்வு இயற்கை வளங்கள் பேணி காத்தல் புவி வெப்பமயமாதல் தடுத்தல் வனவிலங்குகள் பறவைகள் பாதுகாத்தல் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடப்பட்டது. மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அச்சுதமங்கலம் செல்லூர் வடகரை அரசு பள்ளிகளைச் சார்ந்த 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வனவர் சீனிவாசன் நன்றி கூறினார்.