தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ராஜகோபால சுவாமி கோயில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

மன்னார்குடி, ஜுலை 29 : மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா. கோபாலா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். மன்னார்குடி பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, செங்கமலத்தாயார் ஒவ்வொரு நாளும் அன்ன, வெள்ளி, சேஷ, சிம்ம, கருட, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வந்தார்.

இந்த நிலையில், ஆடிப்பூர பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், முன்னாள் அமைச்சர் காமராஜ், கோயில் செயல் அலுவலர் மாதவன் உள்பட ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோபாலா கோஷங்களை எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் செங்கமலத்தாயார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தேரோட்டத்தை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related News