புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஜூலை 26: புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட கோரி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.