தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முத்துப்பேட்டையில் பெட்ரோல் ஊற்றி பைக் எரிப்பு

முத்துப்பேட்டை, ஜூலை26: முத்துப்பேட்டையில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். முத்துப்பேட்டை புதுத்தெரு பட்டறைக்குளம் படித்துறை அருகே வசிப்பவர் ஜெகபர் சாதிக் மகன் முகமது சகில்(21) இவர், தனக்கு சொந்தமான விலை உயர்ந்த கேடிஎம் இரு சக்கர வாகனத்தை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் நிறுத்துவிட்டு தூங்க உள்ளே சென்று உள்ளார். பின்னர் நள்ளிரவு வெடிக்கும் பயங்கர சத்தமும் வெளிச்சமும் முகமது சகில் கண்டு வெளியே வந்து பார்த்தபோது அவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் தீபிடித்து எரிந்துக்கொண்டு இருப்பதை கண்டு அதர்ச்சியடைந்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கும் தீயனைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். ஆனாலும் இரு சக்கர வாகனம் 75சதவிதம் எரிந்துவிட்டது. இதில் எரிந்தபோது பெட்ரோல் டேங் வெடித்த சத்தம் கேட்டுதான் வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்து உள்ளனர். மேலும் தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி பிலிப் பிராங்கிளின் கென்னடி, இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது எறிந்த இரு சக்கர வாகனம் அருகே பெட்ரோல் கொண்டு வந்த பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து முகமது சகில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில் சம்பவம் நடந்த நேரத்தில் தலையில் துணிப்போட்டு முகத்தை மறைத்து ஒரு மர்ம நபர் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த அந்த மர்ம நபரை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் இரு சக்கர வாகனத்தை தீவைத்து எறிந்த இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது