தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மயிலாடும்பாறை அருகே மூலவைகையில் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை

வருசநாடு, ஜூலை 31: மயிலாடும்பாறை ஊராட்சியில் இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் மூல வைகை ஆறு செல்கிறது. இந்த மூல வைகை ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து பலத்த சேதமடைந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியில் புதிய தடுப்பு சுவர் கட்ட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மயிலாடும்பாறை விவசாயிகள் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் வந்தது. இதில் தடுப்புச் சுவர்கள் பலத்த சேதம் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதனால் புதிய தடுப்பு சுவர் கட்டி பொது மக்களை காக்க வேண்டும். மேலும் விவசாய நிலங்கள் பாதிப்படையாமல் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.