தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது

 

போடி, ஜூலை 31: போடி அருகே ரெங்கநாதபுரம் காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (31). இவர் ராணி மங்கம்மாள் சாலையில் டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது டூவீலரையும், அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரின் டூவீலரையும் ஒர்க் ஷாப்பில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு வாகனங்களும் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் பிரவீன்குமார் புகார் கொடுத்தார்.சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 சிறுவர்கள் டூவீலர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சிறுவர்களின் இருப்பிடம் தெரிய வந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.