தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மூணாறு எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் பசு படுகாயம்

மூணாறு, ஆக. 1: மூணாறில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் தமிழர்கள் ஆவர். தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் இவர்களுக்கு சொற்ப வருமானமே கிடைப்பதால் தங்களுடைய இதர செலவிற்காக கறவை பசுக்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் புலியின் தாக்குதலில் பசுக்கள் கொல்லப்படுவது தொழிலாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பலரும் கால்நடை வளர்ப்பதில் இருந்து பின் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அருவிக்காடு எஸ்ட்டே டாப் டிவிசனில் சத்யா என்பவரின் மேய்ச்சலுக்கு சென்ற கறவை பசு மாட்டை புலி தாக்கியுள்ளது. பசுமாட்டின் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து புலி வனப்பகுதியில் ஓடி சென்று மறைந்தது. இதனால் கறவை பசு காயங்களுடன் உயிர் தப்பியது.

பின் கால்களில் பலத்த காயமடைந்த பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் புலியின் தாக்குதல் நடந்துள்ளது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் புலியைய் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் தீர்த்தமலை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.