தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தேனி, ஜூலை 24: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு, நில தகராறில் தடுப்புச் சுவர்கள் மற்றும் புதிய கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ஒரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தேனி வழக்கறிஞர் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை போலீசார் ரத்து செய்யும் வரை தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக வழக்கறிஞர்கள் அறிவித்து நேற்று நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் செயலாளர் செல்வகுமார் உட்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.