தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தினம்

 

Advertisement

பட்டுக்கோட்டை, டிச. 8: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம், மதுரபாஷானியபுரம் கிராமத்தில் மண் வளதினம் நிகழ்ச்சி நடந்து. தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அறிவுரைப்படி தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா தலைமையில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. கூட்டத்தில் மண் வளத்தின் முக்கியத்துவம், மண்ணில் உள்ள சத்துக்களை எவ்வாறு அளவீடு செய்தல், அளவீடுகளின் அடிப்படையில் மண்ணைக் கண்காணித்தல் மற்றும் மண்ணை பராமரித்தல் ஆகிய தலைப்புகளின் கீழ் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துகள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை அளவீடு செய்வதன் முக்கியத்துவம், அதனடிப்படையில் மண்ணின் வளத்தினை எவ்வாறு பயிர் சார்ந்து கண்காணிப்பது மற்றும் மண்ணின் வளத்தினை குறைக்காமல் அதனை எப்படி பராமரிப்பது? என்பது குறித்து விவசாயிகளிடம் விளக்கிக் கூறினார். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் ராஜு விவசாயிகள் தங்கள் வயல்களில் மண்ணின் வளத்தினை அளவீடு செய்வதற்கு மண் மாதிரி எடுக்கும் முறைகள் மற்றும் பல்வேறு பயிர்களுக்கு எவ்வளவு ஆழத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து செயல்விளக்கமாக செய்து காட்டினர்.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, மண்வள அட்டையின் பயன்பாடு அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி வேளாண் துணை இயக்குனர் மற்றும் மதுரபாஷானியபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் மண்வள அட்டைகளை வழங்கினார். உதவி விதை அலுவலர் இளங்கோ கூட்டத்தினை ஒருங்கிணைத்தார். முடிவில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Advertisement

Related News