தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராமங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை

 

தஞ்சாவூர், ஆக. 2: கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராம மக்களுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேளாண் பொறியியல் துறை சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை 27 கிராமங்கள் கொள்ளிடம் கரையோர பகுதியில் இருக்கிறது.

தண்ணீர் திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணியை செய்திருக்கிறோம். அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல், வழங்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவையும் நாம் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றோம். பொதுமக்களை மீட்க கூடிய பேரிடர் மேலாண்மை உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கிறது. தண்ணீரின் அளவு அதிகமாகும் போது பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள இருக்கிறோம்.

வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை என அனைத்து துறையின் மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடைமடை வரை வேகமாக தண்ணீர் சென்று இருக்கிறது. உரிய காலத்தில் தண்ணீரை திறந்து இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Related News