வணிகர் சங்கம் கோரிக்கை திருப்புறம்பியம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
கும்பகோணம், ஆக.1 இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் புறநகர் கும்பகோணம் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துகுறிச்சி, நீரத்தநல்லூர், இணைபிரியாள்வட்டம்,
காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சாம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், புளியஞ்சேரி, ஆலமன்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.