தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவிடைமருதூர் அருகே பேருந்து சேவை நீட்டிப்பு

திருவிடைமருதூர், ஜூலை 25: திருவிடைமருதூர் அருகே சேங்கனூரில் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம், சேங்கனூரில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படியும், உயர்கல்விதுறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் பேருந்து நீட்டிப்பு சேவை துவக்க விழா நடைபெற்றது.

இப்பகுதி பள்ளி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம், கும்பகோணம்-1 கிளை மூலம் கும்பகோணத்திலிருந்து ஆரலூர் வரை இயக்கப்படும் நகர பேருந்தை சேங்கனூர் திருமூவர் கோவில் வழியாக தட நீட்டிப்பு செய்து 3 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த தட நீட்டிப்பு செய்த பேருந்தினை சேங்கனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து மயிலாடுதுறை முன்னாள் எம்.பி ராமலிங்கம் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் உள்ளூர் கணேசன், அண்ணாதுரை, சுதாகர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் முத்துக்குமாரசாமி, துணை மேலாளர் (வணிகம்) ராஜேஷ், கோவி.ஆசைத்தம்பி, வழக்கறிஞர் ரவி, கும்பகோணம்-1 கிளை மேலாளர் திருஞானசம்பந்தம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related News