தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி பயில 4ம் கட்ட வழிகாட்டல் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 24: தஞ்சாவூர் மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான நான்காம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான சிறப்பு குறைதீர் கூட்டம் 09.06.2025 முதல் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக நான்காம் கட்ட கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று (23.07.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 415 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற் றுள்ளார். மேற்படிப்பில் ஆர்வம் இருந்தும் பெற்றோரது கட்டாயத்தின் பேரில் குடும்ப சூழல் காரணமாக மாத வருமானத்திற்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பார்கவி உயர்கல்வி பயில முடியாத மாணவிகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் மாணவி லாவண்யாவின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்டு மாணவியின் உயர்கல்வி குறித்து வலியுறுத்தி இவ்வழிகாட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார் முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன். சஞ்ஜெய், பள்ளி ஆசிரியை மற்றும் வழிகாட்டு ஆசிரியர்களின் சீரிய முயற்சியால் பத்தே நிமிடங்களில் மாணவிக்கு அவரது வீட்டின் அருகாமையில் உள்ள அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரியில் பி.காம் பிரிவில் சேர்க்கை பெற்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் இதேபோன்று மாணாக்கர்களது உயர்கல்விக்காக செயல்பட்டு வரும் அனைத்து ஆசிரியர்களின் முயற்சியை பாராட்டினார். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணாக்கர்களின் பெற்றோர்கள் அரசின் உதவியுடன் தங்களது பிள்ளைகளின் உயர்கல்வியினை உறுதி செய்திட ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.