தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாண்மை, நீர்வளத்துறையில் ராமநாதபுரம் முதலிடம்: மாவட்ட கலெக்டர் தகவல்

 

Advertisement

ராமநாதபுரம், டிச. 6: தேசிய தர வரிசையில் வேளாண்மை மற்றும் நீர் வளத் துறையில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது, ‘‘முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி ஆயோக்கின் மூலம் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது, அதில் 6 கருப்பொருட்களின் துறைவாரியான அளவீடுகளை சாம்பியன் ஆஃப் சேன்ஞ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து காலாண்டிற்கு ஒரு முறை அளவீடுகளை ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களைத் தேர்வு செய்து ஜே.ஐ.சி.ஏ நிதியின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தின் கீழ் 6 கருப்பொருட்களில் ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025ம் காலாண்டில் வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் துறையில் முதல் இடத்தையும், மற்றும் இதர 5 துறைகளில் சிறந்த முன்னேற்றம் அடைந்ததன் அடிப்படையில் 112 மாவட்டங்களின் டெல்டா தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் முதலிடத்தினை பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’’என தெரிவித்துள்ளார்.

 

Advertisement