தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொண்டியில் தூர்வாரப்படும் குளம்

 

Advertisement

தொண்டி, ஜூன் 18: தொண்டி செக்போஸ்ட் அருகே வண்ணான் குளம் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்ததால், தற்போது ஜமாத் சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தொண்டி செக்போஸ்ட் அருகில் உள்ள வண்ணான்குளம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குளிப்பது உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. குளம் முழுவதும் தாமரை செடிகள் வளர்ந்ததால், எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது. இக்குளத்தை தூர்வாரக் கோரி பேரூராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லாததால் தொண்டி தெற்கு தெரு ஜமாத் சார்பில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு தூர் வாரப்பட்டு வருகிறது. ஜமாத் நிர்வாகிகள் கூறியது, மக்களின் பயன்பாட்டில் இருந்த குளம் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு, தாமரை செடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயன்பாடில்லாமல் சில வருடங்களாக இருந்தது. தொண்டி தெற்கு தெரு ஜமாத் சார்பில் தற்போது தூர்வாரப்பட்டு கரைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Advertisement