புதுகை அருகே பெண் கொலையில் வாலிபருக்கு குண்டாஸ்
புதுக்கோட்டை, ஜூலை 31: புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே காரணியானேந்தலில் பர்வீன்பானு(45) என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில், கருங்குழிக்காட்டைச் சேர்ந்த அம்பிராஜன் மகன் காளிதாஸ் (24) என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், காளிதாஸ்யை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, மாவட்டக் எஸ்பி அபிஷேக் குப்தா பரிந்துரை செய்திருந்தார். இதன்பேரில், காளிதாஸை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருணா நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காளிதாஸை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.