தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொன்னமராவதி அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவர் சாதனை

 

பொன்னமராவதி, ஆக. 1: பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவருக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் வடக்கிப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கன் மகன் சரவணன். இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 560 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இதையடுத்து நீட் தேர்விற்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார். சரவணன் நீட்தேர்வில் தேர்வு பெற்று 7.5சதவீத உள் ஒதுக்கீட்டில் சென்னை மதுராந்தகம் கற்பகவிநாயக மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. மருத்துவக்கல்லூரியில் பயில தேர்வு பெற்றுள்ள சரவணனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

 

Related News