தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வேளாண் விவசாயிகள் கடலை பயிருக்கு காப்பீடு செய்ய 31ம் தேதி கடைசி

விராலிமலை,ஜூலை 29: காரீப் பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விராலிமலை வட்டாரம் சார்ந்த வேளாண் விவசாயிகள் ”பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா” பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து இயற்கைப் பேரிடர்களில் இருந்து நிவாரணம் பெறலாம். என்று விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப.மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். விராலிமலை வட்டாரம் கொடும்பாளூர் சரகத்தில் 2 ( தென்னம்பாடி, மீனவேலி)வருவாய் கிராமம், விராலிமலை சரகத்தில் 5 (கத்தலூர், அக்கநாயக்கன்பட்டி, முல்லையூர், வடுகபட்டி,பூதகுடி)வருவாய் கிராமம், மாத்தூர் சரகத்தில் 6( களமாவூர், பாலண்டாம்பட்டி, சிங்கத்தாகுறிச்சி, தென்னதிரையன்பட்டி,லட்சுமணம்பட்டி, மாத்தூர்) வருவாய் கிராமம், நீர் பழனி சரகத்தில் 3(வெம்மணி, பேராம்பூர்,ஆலங்குடி) வருவாய் கிராமங்களுக்கான. காரீப் பருவ நிலக்கடலை பயிருக்கு காப்பீடு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது,

ஏக்கருக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகையாக ரூ.28,800 அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு பிரீமியம் தொகை ரூ.576 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே அறிக்கை செய்யப்பட்ட 16 வருவாய் கிராமங்களில், காரீப் நிலக்கடலை பயிர்களை சாகுபடி செய்துள்ள. வேளாண் பெருமக்கள் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட பிஏசிசிஎஸ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுச் சேவை மையங்களை நேரில் அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வரும் ஜூலை 31 தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு தங்களது பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். நீர்ப்பழனி, மாத்தூர் சரக விவசாயிகள் தொடர்புக்கு உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணசாமி 9790514230, விராலிமலை, கொடும்பாளூர் சரக விவசாயிகள் பர்கானாபேகம் 9655493621, பூதகுடி சரக விவசாயிகள் அருண்மொழி 6385288651 ஆகியோரை தொடர்பு கொண்டு மேலும் தெரிந்து கொள்ளலாம்.

Related News