தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

அறந்தாங்கி, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

கட்டுமாவடி

ஆடி அமாவாசை, தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. பின்னர் கடலில் புனித நீராடி இராமநாத சுவாமி கோயிலில் அபிஷேக ஆராதனை செய்து முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மணமேல்குடி

மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரை புனித நீராட சிறந்த இடமாகும். இந்த கடற்கரையில் புனித நீராடிய பிறகு இங்குள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபடுவது வழக்கமாகும். அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆடி அம்மாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு கடற்கரை குளக்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் பிண்டங்கள் வைத்து தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கீழ ராஜ வீதி அருகே உள்ள சாந்தாரம்மன் கோயில் பல்லவன் குளக்கரையில் காலை முதல் பொதுமக்கள் மறைந்த தாய். தந்தையினர் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தண்ணீர் எடுத்து தர்ப்பணம் கொடுத்து நீர் நிலைகளில் விட்டுச் சென்றனர். மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சாந்தாரம்மன் கோயில் பகுதியில் பூசணிக்காய், கீரை வகைகள், வாழை இலைகள் விற்கப்பட்டது. மேலும் தர்ப்பணம் கொடுக்க கூட்டம் அதிகரிப்பால் தர்ப்பணம் கொடுப்பதற்கு பூஜை தட்டுக்கள் வாங்க முண்டியடித்த மக்கள் நீண்ட வரிசையில் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Related News