தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

 

பெரம்பலூர்,ஜூலை.28: பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் 81வது ஆண்டு திருத்தலப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஆக.4ம்தேதி தேர்பவனி நடைபெறுகிறது. பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள, புனித பனிமயமாதா திருத்தலத்தின் 81 வது ஆண்டு பெருவிழா, வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி நேற்று (27 ஆம்தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றம் நடை பெற்றது.

பெரம்பலூர் மறை வட்ட முதன்மை குருவும், பங்கு குருவுமான சுவக்கின் தலைமையில் நடைபெற்ற விழாவில், கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளர் பேரருள்திரு அந்தோணி ஜோசப் கலந்து கொண்டு திருவிழா கொடியை புனிதப் படுத்தி ஏற்றி வைத்தார். முன்னதாக சப்பர பவனி நடைபெறும் தெருக்களில் கொடி பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னை மரியாள் முதல் சீடர் என்ற தலைப்பில் மறையுரையுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் அருட்சகோதரர் எட்வின், பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் மற்றும் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித பாத்திமா தொடக்கப்பள்ளி, ஹோலி கிராஸ் மருத்துவ மனை அருட்சகோதரிகள், அன்பியம் குழுவினர், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர், கத்தோலிக்க சங்கத்தினர், தூய வின்சென்ட் தே பவுல் சபையினர், இளைஞர் மன்றத் தினர் என பெரம்பலூர் மற்றும் பாளையம், எளம்பலூர், ரெங்க நாதபுரம், கவுள் பாளையம்,

சத்திரமனை, புது நடுவலூர், மைக்கேல்பட்டி, வரதராஜன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு பங்கு குருக்கள் தலைமையில் மறையுரையுடன் சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் 81 வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு வருகிற ஆக.4ம் தேதி இரவு 8மணிக்கு அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது. 5ம் தேதி காலை திருவிழா நன்றி திருப்பலி நடைபெறுகிறது.