தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வந்து ஆடு திருடிய ஒருவர் கைது

 

ஜெயங்கொண்டம், ஆக. 3: ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வந்து ஆடு திருடிச் சென்ற மூவரில் ஒருவர் சிக்கினார், இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அடுத்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மாயவேல்(75). இவர், 7 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்ததால், ஆடுகளை வீட்டில் சுவர் ஓரமாக கட்டிவிட்டு, இரவு தூங்கினார். பின்னர் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதும் மாயவேல் மற்றும் அவரது மகன் வெளியே வந்து பார்த்தனர் அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஆடுகளை தூக்கிச் சென்றனர்.

அதைக் கண்டதும் மாயவேல் சத்தம் போட்டதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதைக் கண்டதும் இருவர் ஆடுகளை தூக்கிக்கொண்டு பைக்கில் தப்பிசென்று விட்டனர். ஒருவர் மட்டும் ஆட்டுடன் கிராமத்தினரிடம் சிக்கினார். அவரை, ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, மாயவேல் புகார் கொடுத்தார். விசாரணையில் ஆட்டுடன் பிடிபட்டவர் ஆண்டிமடம் விளந்தை காலனி தெரு, பெரியசாமி மகன் பழனிசாமி(23) என்பது தெரிய வந்தது. அதையடுத்து, சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கைது செய்து, ஆடுகளுடன் பைக்கில் தப்பிச்சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

 

 

Related News