தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி அமாவாசை சிறுவாச்சூர் மதுர காளியம்மன் உள்பட அம்மன்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

பெரம்பலூர், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற அம்மன் வழி பாட்டுத் தலமான சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கண்ணகியின் சினம் தணித்த ஸ்தலமாகக் கருதப்படும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் ஸ்ரீ ஆதிசங்கர் வழிபாடு செய்த பெருமை கொண்டதாகும். வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், அமாவாசை, புத்தாண்டு மற்றும் பண்டிகை நாட்களிலும் மட்டுமே நடை திறக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தங்கத்தேர் உள்ளது.

இக்கோயிலில் நேற்று (24ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர். சிறுவாச்சூர் மற்றும் அயிலூர், மருதடி, விளாமுத்தூர், செல்லியம்பாளையம், நொச்சியம், அரணாரை, நாரணமங்கலம் உள்பட பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்களும், குலதெய்வ வழி பாட்டாளர்களும் காலை முதல் மாலை வரை ஆயிரக் கணக்கானோர் திரண்டுவந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

அதேபோல் பெரம்பலூர் நகரில் பூசாரித் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பக்தர்கள் சார்பாக, ஆடி அமாவாசையை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் மஹா மாரியம்மன் கோயிலிலும், அரணாரை அருகே உள்ள நீலி அம்மன், செல்லியம்மன் கோயில்களிலும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், செல்லியம்மன், நீலியம்மன், கோயில்களில், சிவாலயங்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.