தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரோந்து சென்ற வனத்துறையினர் வாகனத்தை விரட்டிய காட்டு யானை

 

கூடலூர், ஆக. 1: கூடலூரை அடுத்த தேவர் சோலை சர்க்கார்முலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற வனத்துறையினர் வாகனத்தை அந்த வழியாக சாலையில் நடமாடிய காட்டு யானை விரட்டியது. கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகளை கண்காணிக்கவும் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், வனத்துறையினர் இரவு நேரத்தில் வாகன ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு ரோந்து பணிகளில் ஈடுபடும் வனத்துறை வாகனங்களை காட்டு யானைகள் பலமுறை துரத்தி சேதப்படுத்தியும் உள்ளன.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு சர்க்கார் முலை பகுதியில் கூடலூர் தேவர் சோலை பிரதான சாலையில் நடமாடிய யானை ஒன்று அங்குள்ள கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து உள்ளது. தகவல் அறிந்து யானையை விரட்டுவதற்காக அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் வாகனத்தை யானை திடீரென விரட்டி உள்ளது. அப்போது வனத்துறையினர் வாகனத்தை வேகமாக அங்கிருந்து இயக்கி தப்பித்து உள்ளனர். தொடர்ந்து சாலையில் சிறிது நேரம் நடமாடிய யானையை வனத்துறையினர் டார்ச் லைட் அடித்து விரட்டினர். பின்னர் யானை தேயிலை தோட்டத்தின் வழியாக இறங்கி வேறு பகுதிக்கு சென்றுள்ளது.

 

Related News