முதியவரின் சடலம் 7 நாட்களுக்கு பின் மீட்பு

பாலக்காடு, ஆக. 6: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அடுத்த பாலபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யூசப் (60). இவர் கடந்த ஜூலை 27ம் தேதி ஒத்தப்பாலம் அருகே பாரதப்புழா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதையறிந்த ஒத்தப்பாலம் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்...

அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டுக்குள் விஷ பாம்பு புகுந்ததால் பரபரப்பு

By Karthik Yash
9 hours ago

கூடலூர், ஆக. 6: கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் கழிப்பறைக்குள் கட்டு விரியன் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு அமைந்துள்ள பகுதியில் புதர்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. மேலும், இங்குள்ள கழிவறை...

மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

By Karthik Yash
9 hours ago

பந்தலூர், ஆக. 6: பந்தலூர் அருகே பொன்னூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் பாதுகாப்பு சுற்றுச்சுவர் நேற்று பெய்த கனமழைக்கு இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக மாவட்ட நிர்வாகம் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. பகுதி சுற்றுச்சுவர் அபாயகரமாக இருப்பதால் எந்த நேரத்திலும்...

ஊட்டிக்கு கன மழை எச்சரிக்கை ஆடிப்பெருக்கையொட்டி கல்பாத்தி ஆற்றின் படித்துறையில் கன்னிமார் பூஜை

By Francis
04 Aug 2025

  பாலக்காடு, ஆக. 5: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பாலக்காடு கல்பாத்தி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான மக்கள் குவிந்து கன்னிமார் பூஜைகள் செய்து நேற்று முன்தினம் வழிப்பட்டனர். காசியில் பாதி கல்பாத்தி என்ற விளங்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகேயுள்ள பாலக்காடு கல்பாத்தி ஆற்றின் படித்துரைகளில் ஏராளமான மக்கள் குவிந்து கன்னிமாரியர்களுக்கு விஷேச பூஜைகள்...

ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்

By Francis
04 Aug 2025

  அந்தியூர், ஆக. 5: ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வேளாண் விளைபொருட்களின் ஏல விற்பனை நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் பருத்தி பி.டி காட்டன் ரகம் 5 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.78.09 முதல் அதிகபட்சம் ரூ.80.90 வரை சுமார் ரூ.1...

பாலக்காட்டில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

By Francis
04 Aug 2025

  பாலக்காடு, ஆக. 5: பாலக்காடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலக்காடு மாவட்டம் கொடும்பு அருகே கல்லிங்கல் பகுதியில் தண்ணீரில் மாசுப்படியாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கலைக்கூடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர். பாலக்காடு மாவட்ட கணேஷ...

பசுந்தேயிலை வரத்து உயர்வால் தேயிலை தூள் உற்பத்தி அதிகரிப்பு

By MuthuKumar
03 Aug 2025

மஞ்சூர், ஆக. 4: குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து உயர்ந்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகிறது. இது...

கல்லட்டி மலை பாதையில் விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அபாயம் நீடிப்பு

By MuthuKumar
03 Aug 2025

ஊட்டி, ஆக. 4: நீலகிரி மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான, குறுகலாகவும் மற்றும் அதிக வளைவுகளை கொண்டதாக உள்ளது. இது போன்ற சாலைகளில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை இயக்கத் தெரிவதில்லை. குறிப்பாக மிகவும் செங்குத்தாக செல்லும் கல்லட்டி சாலையில் வாகனங்களை இயக்க தெரியாமல் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது....

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

By Arun Kumar
02 Aug 2025

  குன்னூர், ஆக.3: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான திமுக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு...

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கோத்தகிரியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்

By Arun Kumar
02 Aug 2025

  கோத்தகிரி, ஆக.3: ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெற்றிட, அவர்களுக்குள் உள்ள நோயை கண்டறிய தமிழ்நாடு அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர்...