தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேவாலா தனியார் தார் கலவை உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

 

பந்தலூர், ஆக.2: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தார் கலவை ஆலையின் மதில் சுவர் கடந்த 28ம் தேதி இடிந்து விழுந்து அருகே உள்ள வீடுகள் சேதமானது. இதனால் அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்து வந்த மதில் சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்படும் என புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேவாலா பஜாரில் அரசியல் கட்சிகள் சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் சத்திவேல் தார் கலவை ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேவாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த தார் கலவை உரிமையாளரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தார் கலவை ஆலை உரிமையாளர் ராயின் பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

 

Related News