தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காட்டேரி அருவியில் வெள்ள பெருக்கு: வெள்ளி இழை போல் காட்சியளிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசிப்பு

ஊட்டி, ஜூலை 29: ஊட்டி அருகேயுள்ள காட்டேரி அருவியில் வெள்ளி இழைகள் போல் மலையில் இருந்து பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து விழும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், மழைக் காலங்களில் பல இடங்களில் மலைகளின் மீது இருந்து பள்ளங்களை நோக்கி விழும் அருவிகளையும், நீர் வீழ்ச்சிகளையும் காண முடியும். சில அருவிளில் பாறைகளின் மீது தண்ணீர் பாய்வது தொலைவில் இருந்து பார்த்தால், வெள்ளி இழைகள் போன்று காட்சியளிக்கும். இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். மேலும், புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கேத்தி பாலாடா பகுதியிலும் மழை பெய்த நிலையில், தற்போது காட்டேரி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள காட்டேரி மலையின் உச்சியில் இருந்து பாறைகளின் வழியாக தாழ்வான பகுதிக்கு செல்கிறது. இந்த தண்ணீர் பாறைகளின் மீது விழுவது, தொலைவில் இருந்து பார்த்தால் வெள்ளி இழைகள் போல் காட்சியளிக்கிறது. தற்போது மஞ்சூர் மற்றும் ஊட்டிக்கு காட்டேரி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.

Related News