தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூடலூர் அருகே மாடுகளை வேட்டையாடும் புலியை பிடிக்க மயக்க ஊசி ஒலி பெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை

கூடலூர், ஜூலை 28: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது பாடந்துறை. இங்குள்ள சர்க்கார் மூலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அசைனார் என்பவரின் எருமை மாட்டை புலி தாக்கி கொன்றது. சனிக்கிழமை கிருஷ்ணன் என்பவரது மாட்டை அடித்துக்கொன்றது. வனத்துறையினர் சம்பவம் நடந்த பகுதியில் புதியதாக கண்காணிப்பு கேமரா பொருத்தி புலியை தேடி வருகிறார்கள்.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: ஏற்கனவே வைத்த கேமிரா காட்சிகளில் புலியின் நடமாட்டம் உள்ளதா? என்பதனையும் ஆராய்ந்து வருகிறோம்.

கால்நடைகளை வேட்டையாடியது ஒரே புலி தானா? புலி வேட்டையாட முடியாத அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா? முதுமலை புலிகள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புலிகளின் அடையாளத்துடன் இந்த புலி ஒத்துப்போகிறதா? என்பதை உறுதி செய்து புலியின் வயது உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே புலியை கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உயர் அதிகரிகளின் உத்தரவு பெறப்படும். உத்தரவு கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் துவக்கப்படும். இதனால் புலியை பிடிக்கும் நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றது.

பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவிப்புகள் வெளியிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருறோம்.பொது மக்கள் தங்களது மாடு, ஆடுகள் உள்ளிட்ட வளர்ப்பு கால் நடைகளை வெளியிடங்களில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். புதர்கள் நிறைந்த பகுதிகளுக்கு அருகில் மனிதர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். புலிநடமாட்டம் உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த அறிவிப்புகள்ஒலிபெருக்கி மூலம் செய்து வருகின்றனர்.

Related News