தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோத்தகிரி மூனுரோடு, கேசலாடா பகுதிகளில் கரடிகள் நடமாட்டம்: கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்

கோத்தகிரி, ஜூலை 26: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நாவல் பழம் சீசன் துவங்கி உள்ளதால் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், அதை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரவேனு, மூனுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, பன்னீர், ஆடத்தொரை, அளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், சாலைகளில் அதிக நாவல் பழ மரங்கள் உள்ளன.

தற்போது நாவல் பழம் சீசன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவு காய்க்க துவங்கி உள்ளதால் இவற்றை சாப்பிடுவதற்காக பகல் நேரங்களில் சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் சாலை, குடியிருப்பு போன்ற பகுதிகளில் உலா வருவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் பொதுமக்களை துரத்தவும் செய்வதால் வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து, முதுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடியை விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News