தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அம்மன் கோயில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

 

பள்ளிபாளையம், ஆக.3: ஆடி பெருக்கை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மாரியம்மன், முனியப்பன் கோவில்களில் தீர்த்தகுடங்களுடன் வழிபாடு நடந்தது.

ஆடி பெருக்கு நாளில் பள்ளிபாளையத்தில், காவிரிகரையோரங்களில் உள்ள முனியப்பன் கோவில்களில் திருவிழா நடைபெறும். கண்ணனூர் மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடமெடுத்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இது தவிர காகித ஆலை காலனி பாலம், எல்லை முனியப்பன் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்து கிடா வெட்டி விருந்தினர்களுடன் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடுவது வழக்கம். இதன்படி நேற்று சனிக்கிழமை, நகரம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டது. வீதி வீதியாக மாரியம்மன், முனியப்பன் கோவில்களில் தீர்த்த குட ஊர்வலம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

இன்று அதிகாலை, காவிரியில் நீராடி கரையோரங்களில் உள்ள அம்மனை வழிபட்டு ஆடு, கோழி வெட்டி உறவினர்களுக்கு அசைவ விருந்து படைக்கும் பரபரப்பில் பள்ளிபாளையம் மக்கள் உள்ளனர். விழாவை முன்னிட்டு கண்ணனூர் மரியம்மன் கோயில் திடலில் பிரமாண்டமான தூரிகள், ராட்டினங்கள், சிறுவர்களை கவரும் வகையிலான விளையாட்டு பொருள்களை கொண்ட கடைகள் போடப்பட்டிருந்தன. பண்டிகை காரணமாக பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.