சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது

பள்ளிபாளையம், டிச.7: பள்ளிபாளையம் அருகே சந்து கடையில் மதுவிற்ற 2 பேரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பார் உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு 24 மணிநேரமும் விற்பனை செய்வதாக பள்ளிபாளையம் டிஎஸ்பிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து...

டூவீலர் திருட முயன்ற வாலிபர் கைது

By Karthik Yash
17 hours ago

ராசிபுரம், டிச.7: நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில் காவலாளியின் டூவீலரை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் நாகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சின்னுசாமி(45). இவர், மெட்டாலா ஆஞ்சநேயர் கோயிலில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக வீட்டில் இருந்து டூவீலரில் பணிக்கு வந்து விட்டு,...

தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்

By Karthik Yash
17 hours ago

பள்ளிபாளையம், டிச.7: பள்ளிபாளையம் நான்குசாலை பகுதியில் காலை மாலை நேரங்களில் தனியார் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பியபடி அசுர வேகத்தில் செல்கின்றன. குறுகலான சாலையில் கூட்டம் மிகுந்த நேரத்தில் அசுர வேகத்தில் வரும் பேருந்துகள் ஏர்ஹாரன்களை அலறவிட்டு மக்களை அச்சுறுத்துகின்றன. இதனால், டூவீலரில் வருவோர் பலரும் இந்த இரைச்சலில் பதட்டமடைந்து விபத்தில் சிக்குகின்றனர். காலையில் பள்ளி...

2600 டன் கோழித்தீவன மூலப்பொருள் வருகை

By Karthik Yash
05 Dec 2025

நாமக்கல், டிச.6: நாமக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று சரக்கு ரயில் மூலம், கோழித்தீவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 600 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரயிலில் நாமக்கல் வந்தது. கோழிதீவனம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக கடுகுபுண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. சரக்கு ரயிலில்...

ரூ.2.14 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

By Karthik Yash
05 Dec 2025

மல்லசமுத்திரம், டிச.6: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்றைய ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து 60 கிலோ எடை கொண்ட 37 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.130.50 முதல் ரூ.180.50 வரையிலும், 2ம்...

அரசு பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி

By Karthik Yash
05 Dec 2025

குமாரபாளையம், டிச.6: வேமங்காட்டுவலசு அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடைபெற்ற போட்டிகளில் பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குமாரபாளையம் வேமங்காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மாதேசு தலைமை வகித்து பேசினார். பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அஜந்தா...

ராசிபுரம் நகராட்சியில் கடை டெண்டர் ரத்து

By Karthik Yash
04 Dec 2025

ராசிபுரம், டிச.5: ராசிபுரம் நகராட்சி சார்பில், ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில், ரூ.5.75 கோடி மதிப்பில், 20க்கும் மேற்பட்ட கடைகள், பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், கடைகளை டெண்டர் விட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. பணிகள் முடியாத நிலையில், கடைகளை டெண்டர் விடக்கூடாது...

அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்

By Karthik Yash
04 Dec 2025

நாமக்கல், டிச. 5: நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் தனசேகரன்...

குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை

By Karthik Yash
04 Dec 2025

பரமத்திவேலூர், டிச. 5: பரமத்திவேலூரை அடுத்த வில்லிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (48), விவசாயி. இவரது மனைவி நர்மதா. இவர்களுக்கு 6வயதில் ஒரு மகன் உள்ளான். சதீஷ்குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவரிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டில் இருந்த சதீஷ்குமார் விஷம்...

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

By Karthik Yash
03 Dec 2025

மல்லசமுத்திரம், டிச. 4: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயிலில், நேற்று கார்த்திகை நட்சத்திரம் மற்றும் தீபத்திருநாளை முன்னிட்டு மூலவர் கந்தசாமிக்கு சிறப்பு...