தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விதிகளை மீறி நீர்நிலைகளில் மண் திருடும் மர்ம கும்பல்

நாமகிரிப்பேட்டை, ஜூலை 24: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், விதிகளை மீறி நீர் நிலைகளில் மண் திருடும் கும்பல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் எவ்வளவு யூனிட் மண் எடுக்கலாம் என்பது குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் தடையில்லா சான்று பெற்று, அதன் அடிப்படையில் மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காக்காவேரி ஏரி, ஆர்.புதுப்பட்டி மலையடிவாரம், ஆர்.பி.காட்டூர் பகுதியிலுள்ள ஓடை, ஆர்.புதுப்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் சர்ச் அருகில் உள்ள ஓடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், பல மடங்கு கிராவல் மண் திருடப்படுகிறது.

மேலும், அனுமதி ரசீதுகளை போலியாக அச்சடித்தும் மண் கொள்ளை நடக்கிறது. இதனால் குளம், குட்டைகள் குவாரிகள் போல் ஆழமாக்கப்பட்டுள்ளன. மண் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கனிம வளம் திருடு போவதை கண்காணித்து ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கனிம வளம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News