தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.125.80 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

 

நாமக்கல், ஜூலை 26: நாமக்கல் மாவட்டத்தில் ரூ.125 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், நாமக்கல் மாநகராட்சி வார்டு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் சிறப்பு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.70.70 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி மற்றும் பெரியபட்டியில் ரூ.57.50 லட்சம் மதிப்பில் திட்டக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைய கட்டுமானப் பணிகளை நேற்று நேரில் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.118.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணி, புதுச்சத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும். புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆசியா மரியம் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி, முதலைப்பட்டியில் நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதை அவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related News