தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தன்னார்வலர்களுக்கு அழைப்பு

 

மதுரை, ஆக. 2: ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் ஜூலை.21 முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் கால்நடை மருத்துவர்கள் (சுயவிருப்பத்தில்) மற்றும் இப்பணிக்கு தேவையான வசதிகள் செய்து தர விரும்புவோர் மதுரை மாநகராட்சி கால்நடை மருத்துவரை 94987 48935 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் அழகப்பாநகர் முத்துபட்டியிலும், ஆக.7 முதல் 12ம் தேதி வரையிலும், ஆக.13 முதல் 20 வரை ஆனையூரிலும், ஆக.21 முதல் 26 வரை கண்ணனேந்தல் பகுதியிலும், தத்தனேரியில் ஆக.28 முதல் செப்.2 வரையிலும் நடக்கிறது. இரயில்வே காலனி, மகபூப்பாளையத்தில் செப்.3 முதல் செப்.9 வரையிலும், சிந்தாமணி மற்றும் அனுப்பானடியில் செப்.9 முதல் 13ம் தேதி வரையிலும், திருப்பரங்குன்றத்தில் செப்.15 முதல் 19 வரையிலும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இத்தகவலை மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.