தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருப்பரங்குன்றத்தில் தனியார் பஞ்சு குடோனில் தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்

திருப்பரங்குன்றம், ஜூலை 29: திருப்பரங்குன்றத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் நேற்று திடீரென தீப்பற்றியது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அங்கு வழக்கம்போல் வேலை ஆட்கள் பணியில் இருந்தனர். அப்போது பஞ்சு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உருவான தீப்பொறி அருகருகே வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் பற்றியது .இதனால் அவை பற்றி எரியத்தொடங்கின. மேலும் இந்த தீ வேகமாக பரவியதால், அப்பகுதி முழுவதும் இருந்த பஞ்சு கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதற்கடையே பணியில் இருந்த அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால் அது முடியாது போனது. இதையடுத்து மதுரையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து வந்தனர்.

மேலும் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஞ்சு குடோனில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சாம்பலானது. இந்த திடீர் தீ விபத்த்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related News