முதியவர் கொலை; மகன் கைது
சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சி கட்டப்புளிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). இவரது மனைவி ஜெயலட்சுமி. நேற்று அதிகாலை வீட்டின் முன்பு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் ராஜேந்திரன் இறந்து கிடந்தார். சமயநல்லூர் போலீசார் அவரது உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் அவர் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் கருதினர். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமாரிடம் (35) போலீசார் விசாரித்தனர். இதில் நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் இருந்த அவர் சொத்து தகராறில் தந்தையை கீழே தள்ளிவிட்டு கட்டையால் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதனால் கொலை வழக்கு பதிந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.