தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

3 பேருக்கு ஜாமீன் வழங்கியதால் சாலை மறியல் போராட்டம்

 

தேன்கனிக்கோட்டை, ஜூலை 26: தேன்கனிக்கோட்டையில் அடிதடி வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், அதிருப்தியடைந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 23ம் தேதி மாரியம்மன் கோயில் விழா நடைபெற்றது. அப்போது, தேன்கனிக்கோட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பருக்கும், பழையூரைச் சேர்ந்த அம்ரீஸ் (25), அஜய் (24), பிருத்திவி ராஜ் (25) மற்றும் விக்னேஷ் (24) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், நான்கு பேரும் சேர்ந்து தாக்கியதில் படுகாயமடைந்த சக்திவேல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் அம்ரிஷ், அஜய், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையறிந்த சக்திவேல் தரப்பினர், நேற்று காலை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர். பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்ஐ நாகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.