டூவீலரில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி

கிருஷ்ணகிரி, ஆக.5: திருவண்ணாமலை மாவட்டம், பசும்போரை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (61). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மல்லேப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி கெலமங்கலம் சாலை, மல்லேப்பாளையம் பகுதியில் அவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து தவறி...

பராமரிப்பின்றி காணப்படும் ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட்

By Karthik Yash
13 hours ago

ராயக்கோட்டை, ஆக.5: ராயக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் கடந்த 2011ம் ஆண்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இங்கிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு மற்றும் உள்ளூர் கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மழைக்காலங்களில் நீர் செல்ல வழியில்லாததால் பஸ்...

சீதோஷ்ண மாற்றத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி

By Karthik Yash
13 hours ago

கிருஷ்ணகிரி, ஆக.5: கிருஷ்ணகிரியில் நேற்று காலை வழக்கத்தை விட சீதோஷ்ண நிலை மாறி இருந்தது. இதமான வெயிலும், லேசான சாரல் மழை துறியது. அதிகாலையில் பனியின் தாக்கம் காணப்பட்டது. வழக்கமாக 9 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், நேற்று முதல் மாலை வரை இதமான சூழல் தென்பட்டது. பொதுமக்கள் பலரும் சாரல் மழையில்...

போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

By MuthuKumar
03 Aug 2025

போச்சம்பள்ளி, ஆக.4: போச்சம்பள்ளி வாரச்சந்தையில், ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று ஆடி 18ஐ முன்னிட்டு வாரச்சந்தை நடந்தது. அதிகாலையில் கால்நடை, அதை தொடர்ந்து தானியங்கள் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் சந்தை இரவு வரை நடைபெறும். ஆடி 18 பண்டிகை கொண்டாடப்படுவதால், நேற்று காலை கூடியது...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கும் இடங்கள்

By MuthuKumar
03 Aug 2025

கிருஷ்ணகிரி, ஆக.4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், 5ம் தேதி (நாளை) ஓசூர் மாநகராட்சியில் வார்டு எண்.4,5,6 ஆகிய பகுதிகளுக்கு ஓசூர்...

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

By MuthuKumar
03 Aug 2025

கிருஷ்ணகிரி, ஆக. 4: கிருஷ்ணகிரி அணையில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், ஆயிரக்கணக்கானோர் குவிந்து புனித நீராடி மகிழ்ந்தனர். புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டு வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, மத்தூர் அருகே உள்ள சேக்கனாம்பட்டி, போச்சம்பள்ளி அருகே உள்ள...

தென்பெண்ணையில் பெண் சடலம் மீட்பு

By Arun Kumar
02 Aug 2025

  கிருஷ்ணகிரி, ஆக.3: உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே போடூர் தென்பெண்ணையாற்றில் நேற்று 50வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலர் சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். இதன்...

தமிழ் ஆர்வலர்களுக்கு விருது

By Arun Kumar
02 Aug 2025

  கிருஷ்ணகிரி, ஆக.3: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையில், தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல் விருது” 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது....

பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி

By Arun Kumar
02 Aug 2025

  கிருஷ்ணகிரி, ஆக.3: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்...

துர்க்கை மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா

By Karthik Yash
01 Aug 2025

ராயக்கோட்டை, ஆக.2: ராயக்கோட்டை துர்க்கை மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள துர்க்கை மாரியம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த வருடமும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி கங்கனம் கட்டுதலும், சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து...