பள்ளி வேன்-சரக்கு வாகனம் மோதல்

தேன்கனிக்கோட்டை, டிச.6: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ, மாணவிகளை அழைத்து கொண்டு, பள்ளிக்கு வேன் சென்றது. பஞ்சப்பள்ளி அணை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு...

ரூ.1.50 கோடியில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

By Karthik Yash
7 hours ago

தேன்கனிக்கோட்டை, டிச.6: தேன்கனிக்கோட்டையில் ரூ.1.50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ராமச்சந்திரன் எம்எல்ஏ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. 1வது வார்டில் ரூ.10 லட்சத்தில் சிமெண்ட் சாலை, 6வது வார்டில் ரூ.9.90 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், 5வது வார்டில்...

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் மிளகாய் வத்தல் யாகம்

By Karthik Yash
7 hours ago

ஓசூர், டிச.6: ஓசூர் அருகே பிரத்தியங்கிரா அம்மன் கோயிலில் பவுர்ணமியையொட்டி மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. ஓசூர் மோரணப்பள்ளியில் மகா பிரத்தியங்கிராதேவி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மிளகாய் வத்தல் யாகம் செய்து வழிபடுகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கோயிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல்...

கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

By Karthik Yash
04 Dec 2025

கிருஷ்ணகிரி, டிச.5: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தோட்டகணவாய் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா(23). இவர்களுக்கு ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்...

நாகதேவதை கோயில் கும்பாபிஷேக விழா

By Karthik Yash
04 Dec 2025

போச்சம்பள்ளி, டிச.5: போச்சம்பள்ளி வட்டம், புங்கம்பட்டி கிராமம் நாகர்குட்டை பகுதியில் மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற நாகதேவதை கோயில் உள்ளது. இங்கு மூலவராக நாகதேவதை சிலையும், சிலையின் அடிப்பகுதியில் பாம்பு விடிவிலான உருவம் உள்ளது. இது இயற்கையாக உருவாகிய அமைப்பு ஆகும். ஆண்டுதோறும் தை மாதம் கரிநாள் அன்று நாகதேவதைக்கு திருவிழா நடப்பது வழக்கம். இந்த கோயில்...

ஓசூர் மாநகரில் சாலையோர கடைகளை அகற்றக் கூடாது

By Karthik Yash
04 Dec 2025

ஓசூர், டிச.5: ஓசூரில் ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர், நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: ஓசூர் மாநகராட்சி காமராஜ் நகர் காலனியில் உள்ள சாலையோர கடைகள், உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, கடந்த 2019ம் ஆண்டு ஐயப்பன் கோவில் தெரு, காமராஜ் காலனி பகுதியில் அதிகாரப்...

வீட்டில் பதுக்கிய 100 கிலோ குட்கா பறிமுதல்

By Karthik Yash
03 Dec 2025

கிருஷ்ணகிரி, டிச.4: பர்கூர் இன்ஸ்பெக்டர் இளவரசனுக்கு, ஜிட்டோபனப்பள்ளியில் உள்ள வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலம் ராத்தங் கிராமத்தை சேர்ந்த சரவணராம் என்பவரது வீட்டில், சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை...

சாலையை கடக்க முயன்ற லாரி டிரைவர் வாகனம் மோதி பலி

By Karthik Yash
03 Dec 2025

கிருஷ்ணகிரி, டிச.4: கேரளா மாநிலம், மலப்பூரா அவதாக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்(46). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள நாட்டாமை கொட்டாய் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். இதற்காக சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த வாகனம்...

ராகி பயிரை சேதம் செய்த யானைகள்

By Karthik Yash
03 Dec 2025

ஓசூர், டிச.4: ஓசூர் அருகே சானமாவு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது....

கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை அதிகரிப்பு

By Karthik Yash
02 Dec 2025

போச்சம்பள்ளி, டிச.3: போச்சம்பள்ளி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில், அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தாமரை அகல் விளக்கு, துளசிமாட விளக்கு, நட்சத்திர விளக்கு, தேங்காய் விளக்கு உள்ளிட்ட விளக்குகள் ரூ.20 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து போச்சம்பள்ளி மண்பாண்ட வியாபாரிகள் பூங்கொடி வேணுகோபால் கூறுகையில், ‘நாளுக்கு நாள் மண்பாண்ட...